ஏழம்பது பஸ்ஸ பிடிச்சா தான் ,எட்டே கால் ட்ரெயின எப்படியாவது பிடிக்க முடியும். இல்லேன்னா ஒன்பது மணிக்கு மீட்டிங் ஆரம்பிச்சுடுமே. இந்த மேனேஜர் முன்னாடி போய் அசடு வழிய நிக்கனுமே! நேரம் ஆகி போச்சு .. இன்னைக்கு மிஸ் பண்ண தான் போறேன்.. அவசர அவசரமா ஓடி, லிப்ட்டுக்கு காத்திருக்க பொறுமையில்லாம ஆறு மாடி எறங்கி மூச்சிரைக்க கீழ போனா இன்னும் பஸ் வரல.
பஸ் ஸ்டாப்பில், என்னை போன்றே நிறைய அவதி முகங்கள். கூட்டத்தில் நனைந்த தலையை விரித்து விரலால் துவட்டியபடி, பார்க்க கூடாத ஏதோவொன்றை பார்த்துவிட்ட முக பாவனையுடன் ஒரு வெள்ளைக்கார பெண்மணி. அவசரமாய் செல்போனை எடுத்து யாரிடமோ பேச எண்ணை அழுத்தினார்.
” ஹலோ! மெயிண்டனன்ஸ் டிப்பார்ட்மண்டா ? நான் பில்டிங் 220’ல அபார்ட்மன்ட் 205’ல இருக்கேன். காலைல எறங்கி வரும்போது…”
என்று சொல்ல முடியாமல் இழுத்தார்.
“அத எப்படி சொல்றதுன்னு தெரியல .. இதுக்கு முன்னாடி ஒரு தடவை இது மாதிரியே நடந்திருக்கு , இது ரெண்டாவது தடவை .. “”
” அடிக்கடி இப்படி நடந்தா நல்லா இல்லைன்னு தான் கால் பண்ணேன் .அது வந்து ..அது வந்து ” என்று தயங்கி சொல்லமால் இழுத்துக்கொண்டே போக, பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த மொத்த கூட்டமும் அந்த பெண் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கேட்க ஆவலோடு காதை தீட்டிக் காத்துக்கொண்டிருந்தது .
” you know, someone’s dog ….hmmm ”
” you know, someone’s dog has left droppings in the veranda of our building “
” உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சிருக்கும் , தயவு செஞ்சு ஆளுங்கள விட்டு க்ளீன் பண்ண சொல்றிங்களா? ”
என்று சொல்லி , அப்பாடா ஒரு பெரிய காரியம் முடிஞ்சது என்பது போல் செல்போனை அணைத்தார். மொத்த கூட்டமும், அவர் தான் அப்படி செய்துவிட்டார் என்பது போல் பார்ப்பதை உணர்ந்தவர் சற்று சங்கடத்தில் நெளிந்து தான் போனார்.
ஒரு தர்ம சங்கடமான விஷயத்தை,அதுவும் ஒரு பொதுவிடத்தில், இதை உரியவரிடம் சொல்வது தனது கடமை என்பது போல், நாசுக்காக கூறியதை பார்த்த போது அந்த பெண் எனக்கு சற்று உயர்வாகவே தோன்றினார். இதே நம்மளா இருந்தா , ‘ யோவ் என்னைய்யா வீட்ட கட்டி வச்சுருக்கிங்க , இங்க எவன் நாயோ பே… போட்டு வச்சிருக்கு. வந்து கழுவி விடாம , என்னையா பண்றிங்க ‘ அப்படின்னு சொல்லிருப்போமோ அப்படினு நெனச்சுக்கிட்டே பயணத்த தொடர்ந்த போது, மிஸ்டர் மங்குனி ஜோக் ஒன்னு ஞாபகத்துல வந்தது.
மிஸ்டர் மங்குனி இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக் கொண்டிருந்தார். அவரது விமானம் மும்பையில் தரையிறங்க போகிறது , அடுத்த அரை மணி நேரத்தில் அவர் சென்னைக்கு விமானத்தை பிடிக்க வேண்டும். அவருக்கோ வயிறு கலக்க , வேகமாக டாய்லட் நோக்கி சீறிப் பாய்கிறார். அவரை தடுத்த விமானப் பணிப்பெண்
‘ மிஸ்டர் , பிளைய்ட் எறங்க போகுது இப்ப டாய்லட் போக முடியாது ‘
‘ மேடம் வயிறு கடமுட’ங்குது , ஒரு நிமிஷம் குடுத்திங்கனா ஸ்மூத்தா முடிச்சிட்டு வந்துறேன் ‘
‘ நோ , நோ , இந்த ஏழு மணி நேர பயணத்துல அஞ்சு மணி நேரம் நீங்க உள்ள தான் இருந்திருக்கிங்க , பிளைய்ட் இறங்கும் போது யாரும் உள்ள போக கூடாது ‘
‘ அதுக்காக வெளியவா போக முடியும் , ப்ளீஸ் என்ன அலோவ் பண்ணுங்க ‘
‘ நோ நோ , நீங்க ரொம்ப மொரண்டு பிடிச்சா நான் கேப்டன்ட சொல்ல வேண்டியிருக்கும் ‘
‘ வேண்டாம் மேடம் அவருக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்புனு டயலாக் எல்லாம் சொல்லுவாரு , அதுக்கு ஒரு மூணு கல்’ல பாக்கெட்ல போட்டு மூணு தடவை நின்னுக்கோ நின்னுக்கோ அப்படின்னு சொன்ன நின்னுடும்னு என் பாட்டி சொல்லிருக்காங்க, ஒரு மூணு கல்லாவது குடுக்க முடியுமா? ‘
‘ நோ , போய் உக்காருங்க’.
அதே நேரம் விமானம் தடதடவென தரையிறங்க அந்த அதிர்ச்சியில் அவருக்கு அடி வயிற்றில் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டது.
வேகமாக விமானத்திலிருந்து இறங்கி , அருகிலிருந்த டாய்லட்டுக்குள் நுழைந்து பேண்டை கழற்றி தலைக்கு மேல் தரதரவென சுற்ற , பேண்டில் ஒட்டி இருந்த சமாச்சாரம் சுவரில் ஒரு வட்டம் அடித்து விட்டது.
யாராவது பார்த்தால் அசிங்கமாகிவிடும் என்று , வெளியில் இருந்த சுத்தம் செய்யும் சிறுவனிடம் ஒரு பத்து ருபாய் கொடுத்து
‘ தம்பி சுவத்துல கொஞ்சம் அழுக்கு ஒட்டிருக்கு சுத்தம் பண்ணிடு ‘
உள்ளே சென்ற சிறுவன் போன வேகத்தில் மூக்கை பிடித்து கொண்டு வெளியே ஓடி வந்து ,
‘சார் எப்டி சார் சுவத்துல ஏறி இப்படி ஒரு வட்டம் போட்டிங்க ? ப்ளீஸ் எனக்கும் கத்துக்குடுங்க. ! ‘ என்று இருபது ரூபாயை அவரிடம் நீட்டினான்.
Ponns said
கே ஆர் கோவில் தெருவில் கப்பல் ஓட்டியவர் ஞாபகம் வருதே
IQBAL SELVAN said
ஹஹா… தங்கள் தலைப்பு வித்தியாசம்…… கதை பிரமதம்