Archive for நவம்பர், 2008

வாரணம் ஆயிரம்!

இப்பெல்லாம் சினிமா பார்ப்பதையே குறைத்து விட்டேன். பல மாதங்கள் ஆகிவிட்டது படம் பார்த்து. ‘ சூர்யா படம் வந்துருக்கு போகலாம்ங்க’ அப்டின்னு வீட்டுக்காரம்மா ஆசைப்பட்டதால, சரி போவோம்னு கிளம்பிட்டோம்.  எப்பவும் படம் போட்டு ஒரு அஞ்சு நிமிசத்துக்கு அப்பறம் தான் போறது வழக்கம் ஆனா இந்த படம் சூர்யா படம், கெளதம் இயக்கம் அப்டின்றதால வெகு சீக்கிரமே கிளம்பிட்டோம்.
படம் நல்லா இருக்கோ இல்லையோ, தமிழ் படம் முக்கியமா போறதே இங்க இருக்க தமிழர்கள பார்க்கலாம். அதுவும் இல்லாம சில விசில் அடிச்சான் குஞ்சுகள் பட்டைய கெளப்பி நம்ம ஊரு feeling’a குடுப்பாங்க. தியேட்டர்குள்ள டிக்கெட் எடுக்கும் போதே, கட்டவுட் உயரத்துக்கு ரஜினி போஸ்டர் ஒன்னு ( மூணு மாசத்துக்கு முன்னாடி வந்த குசேலன் படத்துக்கு வச்சது), அப்படியே நம்ம ஊரு மாதிரி தான் இருந்தது.

தியேட்டர்குள்ள போனா,  பின்னாடி இருந்த அஞ்சாறு வரிசை நிரம்பிடுச்சு. நடுவுல இடம் கிடைக்காமல் போக ஓரமா ஒரு சீட்ட பிடிச்சு உக்காந்தாச்சு. இப்ப  படம் ஆரம்பிச்சுடாங்க, முதல் சீன்;  ஒரு கிழவர் நடக்க முடியாம நடந்து வர்றார். நல்லா உன்னிப்பா பாத்தா நம்ம சூர்யா!  Body language அப்படியே கிழவர் மாதிரி. கலக்கிட்டாருயா அப்படின்னு தியேட்டரே சீட் நுனிக்கு வந்துடுச்சு. அடுத்த ரெண்டு சீன்’ல பாத்தா ரெத்தம் ரெத்தமா வாந்தி எடுக்குறாரு, ஒரு படத்த பாத்து சிரிக்கிறாரு, pulse கொரஞ்சுடுச்சுன்னு டாக்டர கூப்பிடுறாங்க, அவரு வர்றதுக்கு முன்னாடி இவர் போய்டுறார். அடுத்த சீன் இன்னொரு சூர்யா! அவரு ஹெலிகாப்டர்’ல பறந்துட்டு இருக்கார், ஒரு போன் வருது அப்பா இறந்துடாருனு, அழுகுறார், அப்பறம் வழக்கம் போல flash back. இப்ப, சீட் நுனில இருந்த மொத்த தியேட்டரும் அப்படியே பின்னால சாஞ்சது தான், படம் முடியிற வரைக்கும் முன்னாடி வரவே இல்ல.

கெளதம் மேனன் கதைக்கு ரொம்ப மெனக்கிடவே இல்ல போல. சூர்யா’வ போட்டு புழிஞ்சு எடுத்திருக்கார். சூர்யா ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார். school student’ல இருந்து கிழவன் character வரைக்கும் கனகச்சிதமா பொருந்துது. கௌதமும் , அப்பா சூர்யா’வ எழுபதுகள்ள வர்ற ரவிச்சந்திரன், முத்துராமன் மாதிரியும் அம்மா சிம்ரன்’ன சரோஜா தேவி மாதிரி எல்லாம் காட்டிருக்கார். ஆனா, என்னமோ ஆட்டோகிராப் மாதிரியோ, சுப்ரமணியபுரம் அளவுக்கு ஒரு நேர்த்தியோ இல்லை. நிறைய இடங்கள்ள செட் அப்பட்டமா தெரியுது.

கதைனு பாத்தா புதுசா ஒன்னும் இல்லை, ஏற்கனவே சேரன் சொல்லிட்ட அப்பா மகன் பாசம் + ‘சில்லென்று ஒரு காதல்’ கலந்த ஒரு மிக்ஸ் மாதிரி இருக்கு. சூர்யா school’ல படிக்கிறார், அடுத்த சீன் காலேஜ் போறாரு, guitar வாசிக்கிறார்.  காலேஜ் முடிச்சு ரயில்’ல ஒரு பொண்ண சந்திக்கிறார், காதல் வந்துடுது.  அடுத்து தனியா கம்பெனி ஆரம்பிக்கிறார், அப்பா வாங்குன கடனை அடைக்கிறார், வீட்டை கட்டுறார்.
காதலிச்ச பொண்ணு அமெரிக்கா போனவுடனே இவரும் arrear வச்சிருந்தாலும் visa counselling போறாரு, இவருக்கும் visa  குடுத்திடுறாங்க, அமெரிக்கா வந்திடுறார், காதல் பிறக்குது, அந்த அம்மா ஒரு வெடி விபத்துல இறந்து போக, இவரு வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு மாறிடுறார். அப்பறம் காஷ்மீர் போறார், டெல்லி போறார்,  வீர பதக்கம் வாங்குறார், கடைசில ராணுவத்துல மேஜர் ஆயிடுறார். (தரணிய விட ரொம்ப வேகமான திரைக்கதை அமைச்சிருக்கார் கெளதம்!) இப்ப மறுபடியும் ஹெலிகாப்டர். அப்பறம் என்ன? சுபம்!

கடைசியா அப்பா அஸ்திய கரைக்கும் போது அழக் கூடாது, அப்பாக்கு பிடிக்காது ‘ வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து ‘ அப்டின்னு சிம்ரன் எதோ டயலாக் சொல்ல எல்லாரும் சிரிக்க படம் முடிஞ்சிடுது. படம் போறதுக்கு முன்னாடி மெட்ராஸ் தமிழ் மட்டுமே தெரிஞ்ச நண்பர் ‘ 1000 colors’ பார்த்துட்டியானு கேட்டப்ப எனக்கு ஒன்னும் புரியல, அப்பறம் இத தான் கேக்குறான்னு யூகிச்சேன். அப்பறம் அவனுக்கு வர்ணத்துக்கும் வாரணத்துக்கும் வித்தியாசம் சொல்ல வேண்டி போச்சு. கடைசி வரைக்கும் பட தலைப்பு ஏன்னு புரியவே இல்ல!!?

தியேட்டர்ல விசில் பறந்த சீன் திருவண்ணாமலை பட trailer’ku தான் , கதை , திரைக்கதை, பாடல்கள் , வசனம் அப்படின்னு பேரரசு பேரை போட , அவரு பாத்தா  ரஜினி மாதிரி சொடக்கு போட்டு வந்த நிக்கிறாரு. சிவாஜிக்கு அப்பறம் அந்தளவுக்கு ஒரு விசில் சத்தம் இந்த trailer’ku தான். அக்ஷன் கிங் அர்ஜுன் கலக்க போறாரு, இந்த படத்த தான் நான் அடுத்து ரொம்ப ஆவலா எதிர்பாத்துட்டு இருக்கேன்!

Comments (1)

Older Posts »