இன்னைக்கு எப்படியாவது உட்கார்ந்து இந்த விசயத்தை எழுதிடணும்னு பல நாட்கள் பல விசயங்கள , நடுராத்திரி கூட யோசிச்சுருக்கேன் , என்ன எழுதனும்னு கூட தீர்மானம் பண்ணிடுவேன் . ஆனா மறுநாள் எதாவது ஒன்னு வந்து அது தடைப்பட்டு போகும் , அத அப்படியே மறந்துடுவேன். போன வாரம் என் நண்பன் ஒருத்தன்ட பேசிட்டு இருக்கும்போது அவன் ” ஏன்டா ப்ளாக் எல்லாம் ஆரம்பிச்சு , ஆர்வக் கோளாறுல கொஞ்ச நாளா எழுதிட்டு இருந்தியே , இப்ப என்னாச்சு ? ” அப்படின்னு கேட்டான். அப்ப முடிவு பண்ணுனேன் , இன்னைக்கு அட்லீஸ்ட் நம்ம ப்ளாக்’ல புகுபதிகையாவது ( login) பண்ணிடனும்னு. வந்தது தான் வந்துட்டேன், அப்படியே வழக்கம் போல எல்லாருக்கும் வணக்கத்த சொல்லிட்டு , பித்தனின் புலம்பல்கள ஆரம்பிக்கிறேன்.
இந்த ஒரு வாரமாக ஆங்கில ஊடகங்களுக்கும் , தமிழில் தினமலர் போன்ற தரம் வாய்ந்த நாளிதழ்களும் இந்தியாவின் மாவீரனும், மக்களுக்காக தன் இன்னுயிரையும் ஈயத் தயாராக இருக்கும் பகதுர்ஷா (பாதுஷா) ஷாருக்கானை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கேள்வி கேட்டதை, பாரதத்தின் புகழுக்கு பங்கம் விளைவித்ததாகவே சித்தரித்து கொண்டிருக்கின்றன. அவரும் , தான் இந்த உலகையே ஆள்பவர் போல் , தன்னிடம் கேள்வி கேட்டது தவறு என்றும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.
இவன் யார் ? இந்த வேசதாரியை கேள்வி கேட்டதை குறை என்று சொல்லி , அதன் மூலம் ஆதாயம் தேட அலைந்து கொண்டிருக்கும் நமது வெட்கம் கெட்ட பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும், உள்துறை அமைச்சரும் , அவரது சகாக்களும் தான் கபடதாரிகள். அமெரிக்க அதிகாரிகள், ஷாருக்கான் என்ற தனிப்பட்ட நபரின் மேல் எங்களுக்கு சந்தேகம் கிடையாது , ஆனால் , அவரை வைத்து நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததால் தான் அவரிடம் விசாரணை செய்தோம் என்று கூறியிருக்கின்றனர். அமெரிக்க அதிகாரிகளின் செயல் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ‘ ஐயா ஷாருக்கான் வந்துருக்காக, அவருக்கு மாலை மருவாதி பண்ணி பந்தோபஸ்த்தோட மேடைல கொண்டுபோய் விட்டுட்டு வாங்கடா!!’ அப்படின்னு சொல்றதுக்கு இது இந்தியாவும் இல்லை , அப்படி கட்டளையிடுவதற்கு இங்கு சிதம்பரம் உள்துறை அமைச்சரும் இல்லை. ஒரு பாகிஸ்தானியனும், அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்புடைய கட்சிக்கு வாரி வழங்கி கொண்டிருக்கும் ஒரு வள்ளலுக்கு நிகழ்ச்சி நடத்தவே அமெரிக்கா வந்ததாக கூறியதால் தான் இவனை ஒரு மணி நேரம் உட்கார வைத்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
” நான் மும்பையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவே அமெரிக்கா வந்தேன் , அதை விரும்பாத அமெரிக்கா என்னை அனுமதிக்கவில்லை. ஆகவே இந்தியர்கள் அமெரிக்காவை புறகணிக்க வேண்டும் “என்று அடுத்த பேட்டி கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை . (அந்த பேட்டி முடிந்து அடுத்த விமானத்தில் மீண்டும் அமெரிக்கா வருவார் ). இவர் தன்னை தொலை நோக்கு பார்வை கொண்டவராகவும் , தான் அரசியலுக்கு வரப் போவதாகவும் வேறு கூறிகொண்டிருப்பது வயிற்றில் புளியை கரைக்கிறது.
இது இந்தியாவிற்கு தலைகுனிவா? ” ஆம், தீவிரவாத தொடர்புடைய ஒருவனுக்கு இவ்வளவு வருடமாக நிகழ்ச்சி நடத்தி , கோடிக்கணக்கில் பணம் சேர்த்துக் கொடுத்து தன்னை உத்தமனாக காட்டிகொண்டிருக்கும் இந்த கபடதாரியை தூக்கி வைத்து கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவிற்கு தலைக்குனிவு “.