இராப்பகலா கண்முழிச்சு
ரெண்டுவேல மட்டும் கூழக் குடுச்சு
ஈரேழு மாசம் பாடுபட்டு
கண்ணுக்குக்கண்ணா
‘சாமி செலை’ வடிச்சானம்
- தாரை தம்பட்டை காத பொளக்க
வானவேடிக்கை வானத்த அலங்கரிக்க
முப்பத்து முக்கோடி தேவர்களும்
மந்திரம் முழங்க
பதினெட்டு பட்டி சனமும்
கும்பாபிசேகத்துக்கு வந்துச்சாம்
ஆனா செலை வடிச்ச
சிற்பிய மட்டும் கோவிலுக்குள்ள விடலையாம்
- அவன் தாழ்ந்த சாதியாம் !